Friday, April 18, 2008

ஐக்கிய அரபு நாட்டுக்கு புதிய தலைநகரம்.


துபாய், ஏப்.18-ஐக்கிய அரபு நாட்டின் தலைநகரான அபுதாபியில் மக்கள் நெருக்கடி, போக்குவரத்து நெருக்கடி அதிகம் இருப்பதால், புதிய தலைநகரம் உருவாக்கப்பட இருக்கிறது. இப்போது உள்ள அபுதாபி நகருக்கு அருகில் இருந்து 15 கி.மீ. தொலைவில் இந்த நகரம் உருவாக்கப்படஇருக்கிறது. 4900 ஹெக்டேரில் இந்த நகரம் அமைய இருக்கிறது. இதற்கு காலீபா (Khalifa City) என்று பெயர்.

அடுத்த 25 ஆண்டுகளில் இந்த நகரில் 30 லட்சம் மக்கள் வசிக்க வகை செய்யப்படும். அனைத்து அரசு அலுவலகங்களும், துறை அலுவலகங்களும், அமைச்சரகங்களும், இந்த புதிய தலைநகரில் இருக்கும். அதோடு அனைத்து நாடுகளின் தூதரகங்களும் இங்கு இருக்கும். அலுவலகங்களுடன் மக்களின் குடியிருப்புகளும் இங்கு இருக்கும்.

இந்த தகவல்களை நகரமைப்பு கவுன்சில் டைரக்டர் பலா அல் அக்காபி தெரிவித்தார்.

0 comments:

Free Blog CounterLG